B.ED applications

சென்னை: பி.எட் படிப்பிற்கான விண்ணப்பம் வழங்கும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி உள்ளது. இதில் 7 அரசு கல்லூரிகளும் 14 அரசு உதவு பெறும் தனியார் கல்லூரிகளில் உள்ள 1777 இடம் நிரப்பப்படும். 




இன்று முதல் துவங்கி ஜூன் 30 வரை அணைத்து நாட்களிலும் காலை 10 மணிமுதல் மாலை 3.00 மணிவரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஜூலை 3 அன்று மாலை 5மணிகளுக்குள் அந்தந்த மாவட்ட கல்லூரிகளில் ஒப்படைக்க வேண்டும் எனவும் கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 13 கல்வியியல் மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.




 சென்னையில் சென்னை திருவல்லிக்கேனியில் உள்ள லேடி வில்லிங்க்டன் கல்லூரி மற்றும் சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய இரண்டு இடங்களில் வழங்கப்படுகின்றன.
 எஸ்.டி. எஸ்.சி பிரிவினருக்கும் 250 ரூபாய்க்கும் பி.சி, எம்.பி.சி போன்ற மற்ற பொது பிரிவினருக்கு  500ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது.

Leave Your Comments